பதுளை- பசறை வீதியில் 2ஆம் கட்டை தியனகல பிரதேசத்தில் இன்று (12) இடம்பெற்ற வான் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பதுளையிலிருந்து கெனர்ஜியல் தோட்டத்துக்கான சேவையில் ஈடுபட்ட வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென்றும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.