களுத்துறை நாகொடை வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களான மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் நேற்றிரவு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றாளர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் வைத்தியசாலையின் 3வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பெண்களும், மூன்று ஆண்களுமே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்கள் வைத்தியசாலையின் மதில் சுவருக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த வலையை பிரித்து தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றுள்ள பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஏனையோர் யார் என்பதை அறிய ஆவணங்களை பரிசோதித்து வருவதாகவும் அதிகளவானவர்கள் சிகிச்சை பெற்று வருவதால் தப்பிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து சரியாக தெரிவிக்க முடியவில்லை என நாகொடை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மற்றும் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் ஒரே விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இடையில் பதற்றமான நிலைமை காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றாளர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் வைத்தியசாலையின் 3வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பெண்களும், மூன்று ஆண்களுமே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்கள் வைத்தியசாலையின் மதில் சுவருக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த வலையை பிரித்து தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றுள்ள பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஏனையோர் யார் என்பதை அறிய ஆவணங்களை பரிசோதித்து வருவதாகவும் அதிகளவானவர்கள் சிகிச்சை பெற்று வருவதால் தப்பிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து சரியாக தெரிவிக்க முடியவில்லை என நாகொடை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மற்றும் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் ஒரே விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இடையில் பதற்றமான நிலைமை காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.