முஸ்லிம் கைதிகளுக்கு மதக் கடமைகளை செய்வதற்கு ஏற்பாடு செய்து கொடுக்குமாறு YMMA வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் கைதிகளுக்கு மதக் கடமைகளை செய்வதற்கு ஏற்பாடு செய்து கொடுக்குமாறு YMMA வேண்டுகோள்!


புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் சிறைக்கைதிகள் தமது மதக் கடமைகளைச் சரிவரச் செய்வதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க உரிய நடவடிக்கைகளை  எடுக்குமாறு, YMMA பேரவையினால் மகஜர் ஊடாக  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட  சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இது தொடர்பிலான வேண்டுகோள் விடுக்கப்பட்டு, மகஜர் ஒன்று  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை YMMA பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தெரிவித்துள்ளார்.

ஐந்து நேரத் தொழுகைகள் மற்றும தராவீஹ், வித்ர் தொழுகைகள் உள்ளிட்ட இரவு நேரத் தொழுகைகள், விசேட துஆப் பிரார்த்தனைகள், ஸஹர் மற்றும் இப்தார் நிகழ்வுகளுக்கான ஒழுங்குகள் போன்றவற்றை மேற்கொள்ளுமாறே, குறித்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தேசியத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

"சிறைக் கைதிகளும் மனிதர்களே" என்ற மனிதாபிமான அடிப்படையில், முன்னைய ரமழான்  காலங்களில், இவ்வாறான  ரமழான் சிறப்பு நிகழ்வுகள் மற்றும்  பல்வேறு வசதிகள்,  விளக்கமறியலிலும், ஏனைய சிறையில் உள்ள கைதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால், இம்முறை ரமழானில் அவ்வாறான வசதி வாய்ப்புக்கள் எதுவும்  வழங்கப்படவில்லை என சிறைக் கைதிகளின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ரமழான் மாத காலப் பகுதியில் முஸ்லிம் கைதிகளுக்கு  அவர்களது மதக் கடமைகளைச் சரிவரச்  செய்வதற்கான வசதி வாய்ப்புக்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, மிகவும் பணிவன்புடன் வேண்டிக்  கொள்வதாகவும், குறித்த மகஜரில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-ஐ.ஏ. காதிர் கான்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.