WATCH: தலைமன்னாரில் இருந்து பாக்கு நீரிணை வழியாக தனுஷ்கோடி வரை நீந்தும் 32 வயது இலங்கையர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: தலைமன்னாரில் இருந்து பாக்கு நீரிணை வழியாக தனுஷ்கோடி வரை நீந்தும் 32 வயது இலங்கையர்!

WATCH: தலைமன்னாரில் இருந்து பாக்கு நீரிணை வழியாக தனுஷ்கோடி வரை நீந்தும் 32 வயது இலங்கையர்!

இலங்கை விமானப்படையின் ரோஷன் அபேசுந்தர, பாக்கு நீரிணை வழியாக தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை பின்னர் அதே வழியில் திரும்பி வரும் சவாலான நீச்சல் முயற்சியில் இறங்கியுள்ளார்.


அவர் இன்று (10) அதிகாலை தனது நீச்சல் ஆரம்பித்தார், மேலும் அங்கிருந்து நாளை திரும்புவார்.


இதுவரை 14 நீச்சல் வீரர்கள் பாக்கு நீரிணை வழியாக நீச்சல் மூலம் கடந்திருந்தாலும், நீச்சலுக்கான தனித்துவமான சாதனையை இதற்கு முன்னர் ஒரே ஒரு இலங்கையர் மட்டுமே மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை குமார் ஆனந்தன் எனும் நபர் 1971 ஆம் ஆண்டில் சாதனை படைத்தார், மேலும் அவர் இந்த நிகழ்வை முடிக்க 51 மணித்தியாலம் எடுத்துக் கொண்டுள்ளார்.


இந்நிலையில் இந்த நிகழ்வில் களமிறங்கியிருக்கும் ரோஷன் அபேசுந்தரவுக்கு 32 வயது, மாத்தறை மத்திய கல்லூரியின் கல்வி பயின்ற ஒருவர். 


மேலும் அவர் 2008 ஆம் ஆண்டு முதல் இலங்கை விமானப்படையின் பட்டியலிடப்பட்ட விமானப்படை வீரர், இலங்கையில் பல்வேறு சாகச கடல் - நீச்சல் பயணங்களில் வெற்றிகரமாக பங்கேற்றவர். 


கடந்த மார்ச் மதம் 26 அன்று, 23 மணிநேரத்தில் 49 கி.மீ தூரத்தை கடந்து இலங்கை தேசிய நீச்சல் சாதனையை வெற்றிகரமாக முறையடித்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.