VIDEO : நேற்றிரவு இடம்பெற்ற திருமதி இலங்கை அழகி தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் பதட்டமான நிலை - விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு திருமதி அழகியாக எப்படி வெற்றி பெறுவது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : நேற்றிரவு இடம்பெற்ற திருமதி இலங்கை அழகி தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் பதட்டமான நிலை - விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு திருமதி அழகியாக எப்படி வெற்றி பெறுவது!


நேற்று (04) இரவு கொழும்பில் நடைபெற்ற திருமதி உலகப் போட்டிக்கான திருமதி இலங்கை தேர்ந்தெடுக்கும் விழாவில் பதட்டமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளாது. 2020 திருமதி உலக அழகி திருமதி. கரோலின் ஜூரியினால் வெற்றியாளரிடம் இருந்து கிரீடம் அகற்றப்பட்டமையினாலேயே பதட்டமான சூழ் நிலை ஏற்பட்டது. 

திருமதி உலக அழகி போட்டிக்காக, திருமதி இலங்கையின் வெற்றியாளராக போட்டியாளர்களில் இருந்து எண் 20 போட்டியாளரனினை தேர்வுக்குழு தேர்வு செய்தது.

வெற்றியாளரை கரோலின் ஜூரியினால் முடிசூட்டப்பட்டதோடு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ அவர்களும் மேடைக்கு வந்து வாழ்த்து தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வெற்றியாளருக்கு முடிசூட்டப்பட்ட நிலையில், நிகழ்வில் அழைக்கப்பட்டவர்களில் ஒரு குழுவினரிடமிருந்து பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. குறித்த வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவர் என கூறினர். 

கரோலின் ஜூரி பின்னர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார், திருமதி இலங்கை அழகி வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவராக இருக்க முடியாது, எனவே இரண்டாம் இடத்தினை வெற்ற நபர் புதிய வெற்றியாளராக முடிசூட்ட வேண்டும்  தெரிவித்தார். 

திருமதி உலக அழகி பின்னர் மேடையில் வெற்றியாளரிடமிருந்து கிரீடத்தை அகற்றி, இரண்டாம் இடத்தினை பெற்ற நபருக்கு புதிய வெற்றியாளராக முடிசூட்டினார்.

பின்னர் ஒரு பதட்டமான நிலைமை ஏற்பட்டது. 



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.