திருமதி உலக அழகி போட்டிக்காக, திருமதி இலங்கையின் வெற்றியாளராக போட்டியாளர்களில் இருந்து எண் 20 போட்டியாளரனினை தேர்வுக்குழு தேர்வு செய்தது.
வெற்றியாளரை கரோலின் ஜூரியினால் முடிசூட்டப்பட்டதோடு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ அவர்களும் மேடைக்கு வந்து வாழ்த்து தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வெற்றியாளருக்கு முடிசூட்டப்பட்ட நிலையில், நிகழ்வில் அழைக்கப்பட்டவர்களில் ஒரு குழுவினரிடமிருந்து பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. குறித்த வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவர் என கூறினர்.
கரோலின் ஜூரி பின்னர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார், திருமதி இலங்கை அழகி வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவராக இருக்க முடியாது, எனவே இரண்டாம் இடத்தினை வெற்ற நபர் புதிய வெற்றியாளராக முடிசூட்ட வேண்டும் தெரிவித்தார்.
திருமதி உலக அழகி பின்னர் மேடையில் வெற்றியாளரிடமிருந்து கிரீடத்தை அகற்றி, இரண்டாம் இடத்தினை பெற்ற நபருக்கு புதிய வெற்றியாளராக முடிசூட்டினார்.
பின்னர் ஒரு பதட்டமான நிலைமை ஏற்பட்டது.