புதையல் அகழ்வில் ஈடுபட்ட தேரர்கள் உட்பட பலர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதையல் அகழ்வில் ஈடுபட்ட தேரர்கள் உட்பட பலர் கைது!

வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இரு தேரர்கள் உள்ளிட்ட 11 பேரை ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பூவரசங்குளம், தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்திருந்தனர்.

அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன், 2 கார்கள் மற்றும் முச்சக்கர வண்டியையும் பொலிசார் பறிமுதல் செய்திருந்தனர்.

இந் நிலையில் சந்தேக நபர்களை இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் அவர்களை ஏப்ரல் 9 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.