VIDEO: நாடளாவிய ரீதியில் 10 ஆயிரம் வீடுகளை அகற்றவுள்ள இலங்கை அரசு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: நாடளாவிய ரீதியில் 10 ஆயிரம் வீடுகளை அகற்றவுள்ள இலங்கை அரசு!!


நாடளாவிய ரீதியில் அபாய வலயங்களில் உள்ள 10,000 வீடுகளை அகற்ற திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.


தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் இவ்வாறான வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.


வீடுகளிலிருந்து அகற்றப்படுவோருக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகளை கையகப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


பெருந்தோட்ட பகுதிகளில் காணிகளை பெறுவதில் சில சிக்கல்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.


சிக்கல்களை நிவர்த்தி செய்து, வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


சில பகுதிகளில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான காணிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் மேலும் குறிப்பிட்டார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.