நாட்டு மக்களுக்கு அடுத்த வாரம் UNLIMITED இன்டர்நெட் வசதி?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டு மக்களுக்கு அடுத்த வாரம் UNLIMITED இன்டர்நெட் வசதி?


திறன்பேசி பாவனையாளர்களுக்கான வரையறையற்ற இணையபொதிகளை (Unlimited Internet Packages) எதிர்வரும் வாரமளவில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


வரையறை அற்ற இணையபொதிகளை அறிமுகப்படுத்துமாறு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியிருந்தது.


இதற்கமைய, தொலைத்தொடர்பு சேவையினை வழங்கும் அனைத்து நிறுவனங்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட வரையறையற்ற இணைய பொதிகள் குறித்த பரிந்துரைகளை மீள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


இந்நிலையில், குறித்த இணைய பொதிகள் தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை இந்த வாரத்துக்குள் மேற்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதன்பின்னர், எதிர்வரும் வாரம் முதல் நாட்டு மக்களுக்கு அதிவேகமான வரையறையற்ற இணைய சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.