பாமாயில் இறக்குமதி செய்வதற்கு உடனடியாக தடை விதிக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் இன்று (05) இது தொடர்பான வர்த்தமானியை வெளியிடுமாறு இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.
அதேநேரம், இலங்கையில் பனை விவசாயத்தினை ஆறு மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.