மாத்தறை – தெலிஜ்ஜவில பிரதேச பாடசாலையொன்றின் அறைக்குள், 14 வயதான மாணவியின் உடலை தொட்டு, அம்மாணவிக்கு முத்தம் கொடுப்பதற்கு முயற்சித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறையொன்றில் இருக்கும் புத்தகத்தை எடுத்துவருமாறு அவ்வாசிரியர், மாணவிக்கு பணித்துள்ளார். மாணவியும் புத்தகத்தை எடுப்பதற்காக அவ்வறைக்குச் சென்றுள்ளார். எனினும், மாணவியின் பின்னாலேயே சென்ற அவ்வாசிரியர், மாணவியை கட்டிப்பிடித்து இவ்வாறு துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சித்துள்ளார்.