நீர்கொழும்பு - தலாஹேன பகுதியில் காணாமல் போயிருந்த 2 வயதான குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த குழந்தை தமது பொறுப்பில் உள்ளதாக அவரது தந்தை, 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவித்ததாக அந்த அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன தெரிவித்துள்ளார்.
இந்த குழந்தை கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக அவரது தாயால், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.