கிரீடம் சர்ச்சையில் சிக்கிய புஷ்பிகா விரைவில் அரசியலுக்கு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிரீடம் சர்ச்சையில் சிக்கிய புஷ்பிகா விரைவில் அரசியலுக்கு?


நாடாளுமன்ற தேர்தலில், பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தான் வேட்பு மனு கோரியிருந்ததாக திருமதி ஸ்ரீலங்கா பட்டத்தை வென்ற புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தனக்கு வேட்பு மனு கிடைக்கவில்லையென்றும், எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கொழும்பு - தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற திருமதி ஸ்ரீலங்கா போட்டியில் கலந்துகொண்ட புஷ்பிகா, வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் அதற்கான தகுதி இழந்த நிலையில் மீண்டும் திருமதி ஸ்ரீலங்காவாக மகுடம் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.