யாழ்ப்பாணத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கை விரலைக் கடித்து, காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ். ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாக விகாரையில் இரவுக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு, பின்னர் கைகலப்பாக மாறியதால், பொலிஸ் உத்தியோகத்தரின் கை விரலை இளைஞர் கடித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். விரலைக் கடித்த இளைஞரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.