ஜனாதிபதி பௌத்த வாக்குகள் மூலம் மட்டுமே வெற்றி பெற்றார்! இனவாதம் கக்கும் எஸ்.பி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி பௌத்த வாக்குகள் மூலம் மட்டுமே வெற்றி பெற்றார்! இனவாதம் கக்கும் எஸ்.பி!


ஒரு முஸ்லிம் நபரின் வாக்கு கூட இன்றியே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதாக எஸ்.பி திசாநாயக்க கூறியுள்ளார்.


முற்றுமுழுதாக தனிச் சிங்கள பௌத்த வாக்குகள் மூலமே அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதாக அவர் கூறியுள்ளார்.


பௌத்த தேரர்களின் ஆசிர்வாதத்துடனேயே கோட்டாபய ராஜபக்ஷ வெற்றபெற்றதாக அவர் கூறியுள்ளார்.


கெட்டம்பே ராஜோபவனாராம விகாராதிபதி கெப்பிடியாகொட சிறிவிமல தேரரை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.


அத்துடன் ஜனாதிபதி எந்தளவு வேலை செய்தாலும் அதனை அதிகாரிகளும் அமைச்சர்களும் முன்னெடுப்பதில்லை என்பதை தான் ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.


இது மிகவும் சிரமத்துக்கு மத்தியில் அமைக்கப்பட்ட அரசாங்கம் என்று எஸ்.பி திசாநாயக்க கூறியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.