இலங்கையில் புனித ரமழானுக்கான தலைப்பிறை பார்க்கும் நிகழ்வு! நாளை மறுநாள் நோன்பு என அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் புனித ரமழானுக்கான தலைப்பிறை பார்க்கும் நிகழ்வு! நாளை மறுநாள் நோன்பு என அறிவிப்பு!


நாட்டில் ஷஃபான் மாதத்தில் 29 ஆம் நாளாகிய இன்று, வழமைபோல் ரமழானுக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (12) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற நிலையில், புனித ரமழான் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படவில்லை என அறிவித்துள்ளது.

இதன்படி, ஷஹ்பான் மாதம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு நாளை மறுதினம் (14) புனித ரமழான் மாதம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.