நீர் மீட்டர்கள் 98 இனை திருடிய குற்றச்சாட்டில் தெரனியகல பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர் மீட்டர்கள் அனைத்தும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு (NWSDB) சொந்தமானது ர்ன டி. ஐ. ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
தெரனியகல பிரதேச நீர் திட்டத்தின் போது நிறுவப்படவிருந்த 400 க்கும் மேற்பட்ட நீர் மீட்டர்கள் திருடப்பட்டது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருட்டு தொடர்பாக திட்ட பொறியியலாளர் அளித்த புகாரைத் தொடர்ந்து மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர். மேலதிக விசாரணையில் 98 நீர் மீட்டர் தெரனியகல பிரதேச சபைத் தலைவரின் வசம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக, பொலிசார் தெரனியகல பிரதேச சபைத் தலைவரை கைது செய்தனர், அவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீர் மீட்டர்கள் அனைத்தும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு (NWSDB) சொந்தமானது ர்ன டி. ஐ. ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
தெரனியகல பிரதேச நீர் திட்டத்தின் போது நிறுவப்படவிருந்த 400 க்கும் மேற்பட்ட நீர் மீட்டர்கள் திருடப்பட்டது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருட்டு தொடர்பாக திட்ட பொறியியலாளர் அளித்த புகாரைத் தொடர்ந்து மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர். மேலதிக விசாரணையில் 98 நீர் மீட்டர் தெரனியகல பிரதேச சபைத் தலைவரின் வசம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக, பொலிசார் தெரனியகல பிரதேச சபைத் தலைவரை கைது செய்தனர், அவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.