ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 நியோ விமானம் மாலைத்தீவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தரைவழி வாகனம் ஒன்று விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் விமானத்திற்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விமானத்தை இலங்கைக்கு எடுத்து வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.