திருமதி இலங்கை போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை; பொலிஸ் நிலையம் சென்ற கரோலின் ஜூரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமதி இலங்கை போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை; பொலிஸ் நிலையம் சென்ற கரோலின் ஜூரி!


வாக்குமூலம் வழங்குவதற்காக திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி, கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியுள்ளார்.


திருமதி இலங்கை போட்டியில் முடிசூட்டப்பட்ட புஷ்பிகா டி சில்வா கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்திருந்தார்.


குறித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கரோலின் ஜூரி அங்கு சென்றுள்ளார்.


இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான 'மிஸ் ஸ்ரீலங்கா' அழகிப் போட்டி நிகழ்ச்சியில் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக திருமதி உலக அழகி போட்டியின் ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.


முன்னதாக, நேற்று முன்தினம் (04) திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளருக்கு வழங்கப்பட்ட கிரீடம் சில நொடிகளில் பறிக்கப்பட்டுள்ள மற்றுமொருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.


இந்த போட்டியில் திருமதி புஷ்பிகா டி சில்வா, வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.


இதன்போது, போட்டியில் பங்குப்பற்றுபவர்கள் திருமணமானராக இருக்க வேண்டும் என்றும் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என விதிமுறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிரீடம் சூட்டப்பட்ட திருமதி புஷ்பிகா டி சில்வா, ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர் என்றும் இதனால் போட்டியில் வெற்றி பெற தகுதியற்றவர் என மீண்டும் அறிவிக்கப்பட்டது.


இதனையடுத்து, திருமதி புஷ்பிகா டி சில்வாவுக்கு சூட்டப்பட்ட கிரீடம், மேடையிலேயே மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டு இரண்டாவது இடத்தை பெற்ற திருமதி ருவந்திக்கு சூட்டப்பட்டது.


இந்நிலையில், புஷ்பிகா விவகாரத்தானவர் என்பதனை நிரூபிப்பதற்கு எவ்வித எழுத்து மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இதனால் அவருக்கே இந்த பட்டத்தை இன்று மீள வழங்க தீர்மானித்ததாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.