நௌபர் மௌலவி தலைவர் அல்ல! -பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நௌபர் மௌலவி தலைவர் அல்ல! -பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதில் அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காக, ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை பிரதான சூத்திரதாரியாக அறிவித்துள்ளனர்.

நௌபர் மௌலவி ஸஹ்ரானின் சகாவாக இருந்துள்ளாரே தவிர எந்தச் சந்தர்ப்பத்திலும் ஸஹ்ரானின் தலைவராக செயற்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேககா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (09) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்க்கட்சி மீது பழிசுமத்துவதை தவிர்த்து அதன் பிரதான சூத்திரதாரியை இனங்காண்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவித்துள்ளனர் என்றார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.