கொழும்பு துறைமுக நகரின் முதலீட்டாளர்களுக்கு அங்குள்ள நிலத்தின் உரிமை கிடைக்காது என நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் பியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.
குத்தகை மூலம் கிடைக்கும் காணி பகுதியை மாத்திரம் பயன்படுத்தும் உரிமையே முதலீட்டாளர்களுக்கு இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விசேட பிராந்தியத்தில் டொலர் மூலமே கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறும் என்பதுடன் சம்பளமும் டொலர்களியே வழங்கப்படும்.
உலகம் முழுவதிலும் உள்ள விசேட பொருளாதார வலயங்களில் அந்நாடுகளின் நாணயத்தில் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுவதில்லை.
சர்வதேச நாணயங்களிலேயே அவை நடைபெற்று வருகின்றன எனவும் பியத் பந்து விக்ரம குறிப்பிட்டுள்ளார்.