File Picture |
சிவப்பு நிற மார்பைக் கொண்டுள்ள குறித்த ஆமை இனம், அமெரிக்காவிலிருந்து மீன் இறக்குமதியாளர்களால் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள குறித்த ஆமை இனம் நாட்டிலுள்ள பூர்வீக தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என விலங்கு ஆராய்ச்சி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த ஆமை இனம் நாட்டினுள் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலைகள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் தொடர்பிலான ஆய்வாளரான கலாநிதி என்சலம் டி சில்வா, வன விலங்கு திணைக்களத்திடம் கோரியுள்ளார்.