ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்த குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கும் இரு அரச ஊழியர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் மாவட்டக் கிளையொன்றில் பணியாற்றிவருகின்ற இரு ஊழியர்களே மேற்படி குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கின்றனர்.
கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள இந்த ஊழியர்கள், ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து பதிவு மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.