இலங்கைக்கு அபாய எச்சரிக்கை? நாட்டில் பல கொரோனா கொத்தணிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு அபாய எச்சரிக்கை? நாட்டில் பல கொரோனா கொத்தணிகள்!

நாட்டில் ஏராளமான கொரோனா தொற்று கொத்தணிகள்; உருவாகி வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது,

பல கொத்தணிகள் தோன்றியுள்ளமையால்; தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், நாடு முழுவதும் நோய் பரவுவதற்கான அறிகுறியாக இதை பார்க்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, தற்போதைய சூழ்நிலையில் பொது மக்கள் சுகாதார விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுமாறும் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா பரவல் காரணமாக மேல், வடமேல் மற்றும் திருகோணமலை கல்வி வலய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.