வெளிநாட்டு பேரவைகள் தீர்மானங்களை எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது! கட்சி பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் ஒன்றுபடவேண்டும்! -கல்வி அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டு பேரவைகள் தீர்மானங்களை எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது! கட்சி பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் ஒன்றுபடவேண்டும்! -கல்வி அமைச்சர்


வெளிநாட்டு பேரவைகள் இலங்கையின் எதிர்காலம் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என கல்வியமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.


கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு இதனை தெரிவித்துள்ள அமைச்சர் பொதுமக்கள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விளங்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.


சட்டங்களை உருவாக்குவது அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது முப்படையினரினதும் நியமனங்களை மேற்கொள்வது போன்றவற்றை முன்னெடுப்பதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் ஆணையாளரும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு அனுமதிக்கவேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் நாடாளுமன்றத்தி;ன் பங்களிப்பு என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என மனித உரிமை கருதுகின்றது,என தெரிவித்துள்ள அமைச்சர் 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்து முப்படையினரையும் கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான திட்டம் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.


இலங்கையை பயன்படுத்தி சில நாடுகள் தங்கள் நிகழ்ச்சி நிரலை பூர்த்தி செய்ய முயல்வதற்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து விட்டு அனைத்து தரப்பினரும் ஒன்றுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.