எண்ணெய் வள நாடுகளுடன் உடன்படிக்கையை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எண்ணெய் வள நாடுகளுடன் உடன்படிக்கையை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை!


டொலருக்கு எதிரான ரூபாவின் விரைவான தேய்மானம், அதன் காரணமாக நாட்டின் எண்ணெய் இறக்குமதியில் ஏற்படவுள்ள தாக்கம் என்பவற்றை கருத்திற்கொண்டு இலங்கை அரசாங்கம் எண்ணெய் வள நாடுகளுடன் அரசாங்கம் உடன்படிக்கையை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


இதன் குவைத், ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து நீண்டகால அடிப்படையில் எரிபொருட்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.


இலங்கையின் எரிபொருள் விலை எதிர்காலத்தில் மேலும் உயரும் என்பதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் இந்த நாடுகளின் தூதரகங்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


நீண்டகால கட்டண திட்டத்தின் கீழ் சிறப்பு ஒதுக்கீட்டு முறையை பயன்படுத்தி சலுகை விலையில் மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதே இந்த G2G உடன்படிக்கையின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.