பஸ்களில் இன்று முதல் சிவில் உடையில் பயணிக்கவுள்ள பொலிஸார்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ்களில் இன்று முதல் சிவில் உடையில் பயணிக்கவுள்ள பொலிஸார்?


கொழும்பில் இருந்து தூர இடங்களுக்கு செல்லும் பஸ்களில்  இன்று (05) முதல் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பயணிக்கவுள்ளனர்.


பஸ் சாரதிகளில் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


இதேவேளை, நாட்டில் நேற்று (04) வாகன விபத்துகளில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகளவானவை மோட்டார் சைக்கிள் விபத்துகள் என தெரிவிக்கப்படுகின்றது.


பொலிஸாரின் தகவலுக்கு அமைய ஏப்ரல் 10 முதல்  20ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நாட்டில் அதிக விபத்துகள் பதிவாகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.