உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான கல்வி அமைச்சரின் அறிவிப்பு!


2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றை இம்மாத இறுதியில் வெளியிட  எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 


பரீட்சையின் பெறுபேற்றை கொண்டு மாணவர்கள் காலதாமதமில்லாமல் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


கண்டி - கலகெதர பகுதியில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


கடந்த மாரச் மாதம் இடம்பெற்று முடிந்த  2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு ஜூன் மாதம் வெளியிடப்படும்.  


உயர்தர கற்கையினை மேற்கொள்ள தகுதிபெற்ற மாணவர்களுக்கான உயர்தர கற்றல் நடவடிக்கைகள் ஜூலை மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும். மேலும் காலதாமதமில்லாமல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது.


பல்கலைக்கழகங்களில் காணப்படும் பௌதீள வள பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யோசனைகளை முன்வைத்துள்ளது. 


பல்கலைழக மாணவர்களின் தங்குமிட பற்றாக்குறைக்கு  தீர்வுகாண உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.