பயணிகளின் கோரிக்கைக்கு அமைய நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ள ரயில் சேவைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயணிகளின் கோரிக்கைக்கு அமைய நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ள ரயில் சேவைகள்!


நாளை முதல் பல ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ள நிலையில், பயணிகளின் கோரிக்கைக்கு அமைய, சில ரயில் சேவைகளை மீள முன்னெடுப்பதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


யாழ்ப்பாணம், கண்டி, பதுளை, பொலன்னறுவை முதலான இடங்களுக்கான 16 ரயில் சேவைகள், நாளை முதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.


கொரோனா பரவல் காரணமாக ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்  தெரிவித்திருந்தது.


இந்நிலையில், பயணிகளின் கோரிக்கைக்கு அமைய, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் கண்டி முதலான இடங்களுக்கான சில ரயில் சேவைகளை மீள முன்னெடுப்பதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய, கொழும்பு, கோட்டை முதல் காங்கேசன்துறைக்கான இரண்டு நாளாந்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


அத்துடன், கொழும்பு கோட்டை முதல் பதுளைக்கான நாளாந்த ரயில்  சேவை ஒன்றும், கோட்டை முதல் கண்டிக்கான வார இறுதி ரயில் சேவை ஒன்றையும் முன்னெக்க உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது..


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.