தொழில் ரீதியில் விளையாட்டு வீரர்களுக்கான உடன்படிக்கை மேற்கொள்ள நடவடிக்கை! -நாமல்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொழில் ரீதியில் விளையாட்டு வீரர்களுக்கான உடன்படிக்கை மேற்கொள்ள நடவடிக்கை! -நாமல்


சர்வதேச தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது இலக்காகும். நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 59 விளையாட்டு வீரர்கள் தொழில் ரீதியில் ஒப்பந்தங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். 

மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் மூலம் தேசிய விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான திட்டம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

முதல் முறையாக தொழில் ரீதியில் விளையாட்டு வீரர்களுக்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.