மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலாத்காரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை இன்று (01) வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து விடுத்துள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கஷ்ட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் அடிப்படையில் 28 வயதுடைய ஆசிரியை ஒருவர் கடமையாற்றி வருகிறார்.
இந்நிலையில் குறித்த ஆசிரியையை பாடசாலை அதிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்த காரணத்தால் குறித்த ஆசிரியை சில மாத்திரைகளை அதிகளவு உட்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த அதிபரை புதன்கிழமை பொலிஸார் சந்தேகத்தின்பேரில் கைது செய்து இன்று வியாழக்கிழமை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்து விடுவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-கனகராசா சரவணன்