வாழைச்சேனையில் ஆசிரியை மீது பலாத்கார முயற்சி! அதிபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாழைச்சேனையில் ஆசிரியை மீது பலாத்கார முயற்சி! அதிபர் கைது!


மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலாத்காரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை இன்று (01) வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து விடுத்துள்ளது.


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கஷ்ட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் அடிப்படையில் 28 வயதுடைய ஆசிரியை ஒருவர் கடமையாற்றி வருகிறார்.


இந்நிலையில் குறித்த ஆசிரியையை பாடசாலை அதிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்த காரணத்தால் குறித்த ஆசிரியை சில மாத்திரைகளை அதிகளவு உட்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதனையடுத்து குறித்த அதிபரை புதன்கிழமை பொலிஸார்  சந்தேகத்தின்பேரில் கைது செய்து இன்று வியாழக்கிழமை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்து விடுவித்துள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


-கனகராசா சரவணன்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.