ரஞ்சன் - சஜித் சிறையில் சந்திப்பு! சஜித் வழங்கிய உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரஞ்சன் - சஜித் சிறையில் சந்திப்பு! சஜித் வழங்கிய உறுதி!


ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சொத்தாவார். அவருக்கு நியாயம் கிடைப்பதற்காக ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும், அரசியலமைப்பிற்கு இணங்கவும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


அங்குணுபெலஸ்ஸ சிறைச்சாலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.


அவர் மேலும் கூறுகையில்,


பிறந்துள்ள சித்திரை புத்தாண்டு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறந்ததாக அமைய வாழ்த்துவதற்காக அவரை பார்வையிட வந்தோம். 


அவருக்காக எதிர்வரும் நாட்டில் ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும், அரசியலமைப்பிற்கு அமையவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும். 


ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைப்பதற்கு தொடர்ந்தும் நாம் முன்னின்று செயற்படுவோம்.


ரஞ்சன் ராமநாயக்க என்ற மனிதாபிமானம் மிக்க நபர் இந்த நாட்டின் சொத்தாவார். நாட்டு மக்களுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளார். 


மக்கள் அதிகம் நேசிக்கும் அரசியல் தலைவரான அவருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார். 


-எம்.மனோசித்ரா


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.