சட்டவிரோத மதுபானத்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் 03 பேர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
படுகாரமடுவ பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஏனைய நபர் மேலதிக விசாரணைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கலென்பிதுனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.