சீனர்களுக்கு செலுத்திய பின் எஞ்சிய தடுப்பூசிகள் நாட்டுமக்களுக்கு வழங்கப்படும்! -சுதத் சமரவீர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீனர்களுக்கு செலுத்திய பின் எஞ்சிய தடுப்பூசிகள் நாட்டுமக்களுக்கு வழங்கப்படும்! -சுதத் சமரவீர


சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சீன பிரஜைகளுக்கு செலுத்தப்படவுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானி தொற்று நோய் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.


அதன்பின்னர் நிபுணத்துவ குழுவின் பரிந்துரைக்கு அமைய நாட்டு மக்களுக்கு குறித்த தடுப்பூசியினை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரம் 70 லட்சம் ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக அரச ஒளடத கூட்டுத்தாபனத்திற்கும் ரஷ்யாவின் கெமிலியா நிறுவனத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.


இதேவேளை, நாட்டில் இதுவரை 919,753 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.