20 ஆண்டுகள் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையர் - ‘அடையாளம் தெரியாதவர்’ என்று நீதிமன்றம் குழப்பத்தில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20 ஆண்டுகள் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையர் - ‘அடையாளம் தெரியாதவர்’ என்று நீதிமன்றம் குழப்பத்தில்!

சிங்கப்பூர் :  ‘அடை­யா­ளம் தெரி­யா­த­வர்’ என்று நீதி­மன்ற ஆவ­ணங்­களில் தெரி­விக்­கப்­பட்ட ஒரு­வர் குறித்து நீதி­மன்றம் குழப்­பத்­தில் உள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

இந்த ஆண்டு தொடக்­கத்­தில் மகேஷ் பத்­ம­நா­பன் என்ற பெய­ரில் குற்­றம் சாட்­டப்­பட்ட அந்த ஆட­வ­ருக்கு 67 வயது என்று நம்­பப்­ப­டு­கிறது. அவர் இலங்­கை­யில் இருந்து வந்­த­வர்.

குடி­நு­ழைவு குற்­றத்தை எதிர்­நோக்­கும் அந்த ஆட­வர் சிங்­கப்­பூ­ரில் 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சட்­ட­வி­ரோ­த­மா­கத் தங்கி வரு­கி­றார் என கூறப்­பட்­டது.

ஆனால் மகேஷ் பத்­ம­நா­பன் என்ற பெய­ரில் அவர் வைத்­தி­ருக்­கும் கடப்­பி­தழ் செல்­லு­ப­டி­யா­கா­தது என்று குடி­நு­ழைவு சோத­னைச் சாவடி அதி­காரி கூறி­னார்.

அவர் வெவ்­வேறு பெயர்­களில் பல பத்­தி­ரங்­களை வைத்­தி­ருப்­ப­தால் அவ­ரது உண்­மை­யான அடை­யா­ளத்­தைக் கண்­ட­றி­வது சிர­ம­மாக உள்­ள­தாக அரசுத் தரப்பு தெரி­வித்­தது.

எனவே, ‘அடை­யா­ளம் தெரி­யா­த­வர்’ (அன்­னோன்) என்ற பெய­ரில் குற்­றச்­சாட்­டைத் தாக்­கல் செய்து வழக்கை நடத்த அரசு தரப்பு கோரி­யது.

ஆனால் இது குறித்து நீதி­பதி ஆடம் நக்­கோடா கவலை தெரி­வித்­தார்.

‘அடை­யா­ளம் தெரி­யா­த­வர்’ என்று குறிப்­பி­டப்­பட்ட ஒரு­வர் மீது எவ்­வாறு குற்­றம் சாட்­டு­வது என்று நீதி­பதி கேள்வி எழுப்­பி­னார்.

“எனக்கு இது புரி­ய­வில்லை. ‘அடை­யா­ளம் தெரி­யா­த­வர்’ என்று குறிப்­பி­டப்­பட்ட ஒரு­வர் மீது குற்­றம் சுமத்த நான் எப்­படி அனு­மதிக்க முடி­யும்,” என்று கேள்வி எழுப்­பி­னார்.

மீண்­டும் மகேஷ் பத்­ம­நா­பன் என்ற பெய­ரி­லேயே குற்­றம் சுமத்தி வழக்­கைப் பதி­யு­மா­றும் இந்த விவ­கா­ரம் குறித்து தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கத்­தில் விளக்­கம் பெறு­மா­றும் அரசுத் தரப்­பி­டம் கூறப்­பட்­டது.

மொழி பெயர்ப்­பா­ளர் குற்­றச்­சாட்டை அந்த ஆட­வ­ரி­டம் தமி­ழில் வாசித்­துக்­காட்­டி­னார். அவ­ரது அடை­யா­ளம் உறு­தி­செய்­யப்­ப­ட­வில்லை என்று மொழி­பெ­யர்ப்­பா­ளர் நீதி­மன்­றத்­தி­டம் கூறி­னார்.

பிப்­ர­வரி 6ஆம் தேதி முதல் விசா­ர­ணைக் காவ­லில் உள்ள அந்த ஆட­வர், காணொளி மூலம் நடந்த விசா­ர­ணை­யில் நீண்ட நரைத்த முடி­யு­டன் காணப்­பட்­டார். அவ­ருக்கு $20,000 பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது. விசா­ர­ணை­யின்­போது அவர் பேச­வில்லை. அவ்­வப்­போது தலையை மட்­டும் ஆட்­டி­னார்.

அவர் மீது மேலும் அதிக குற்­றங்­க­ளைச் சுமத்த எண்­ணி­யி­ருப்­ப­தா­க­வும் ஆனால் முத­லில் அவர் யார் என்­ப­தைக் கண்­ட­றிய வேண்­டும் என்­றும் அரசுத் தரப்­பில் வழக்கை நடத்­தும் அதி­காரி கூறி­னார்.

வழக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. ஏப்­ரல் 20ஆம் தேதி மீண்­டும் அவர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார்.

சட்­ட­வி­ரோ­த­மா­கத் தங்கி இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டால் அவ­ருக்கு ஆறு மாதங்­கள் வரை சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம். மேலும் $6,000 வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். அவ­ருக்கு 50 வய­துக்கு மேல் ஆகி­விட்­ட­தால் பிரம்­படி கொடுக்­கப்­படாது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.