இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் இயங்கும் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை கடந்த 13ம் திகதி அரசாங்கம் வெளியிட்டநிலையில் அந்த அமைப்புக்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் தலைவர்களிடம் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறித்த அமைப்புக்களின் சொத்து விபரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், அந்த சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் தலைவர்களிடம் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறித்த அமைப்புக்களின் சொத்து விபரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், அந்த சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.