தேவை இல்லாமல் வாய் உலம்பி பிரச்சினைக்குள் மாட்டிக்கொள்றார்கள். இப்போது தலைவரையும் வம்புக்கு இழுக்கின்றார்கள். கட்சியை பல தடவை நீதிமன்றத்தில் நிறுத்தியவர்களும் கட்சிக்குள் இருக்கின்றார்கள். நான் யாரையும் அவசரப்பட்டு விரட்டுவதில்லை. அவர்களை அவர்களாகவே விரட்டப்படக் கூடிய வழியை தேடிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவில்லாமல் முதலமைச்சராக வந்திருக்க முடியாது. இப்போது புதிய எஜமான்களை கண்டதும் அதனையெல்லாம் மறந்துவிட்டார்கள் என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.