மக்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்கப்படும்!


அரசாங்கம் சிரமங்களை எதிர்கொண்டாலும் எரிபொருள் அல்லது உள்நாட்டு எரிவாயுவின் விலையை அதிகரிக்க அதற்கு உரிமை இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.


உலகளாவிய கொரோனா தொற்று நோயின் போது உலக சந்தையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்திருந்தது.


எனினும் பொதுமக்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்க இந்த அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், புத்தாண்டு பருவத்தின் இறுதி வரை எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வை அரசாங்கம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.


புது வருடத்துக்கு பின்னர் மக்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.