இலங்கையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாக, முஸ்லிம்கள் அணியும் புர்கா மற்றும் நிகாப் அணிவதை தடைசெய்யும் அமைச்சரவை தாளில் கையெழுத்திட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இன்று மிஹிரான பகுதியில் விழா ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பதிலளித்தார்.
$ads={1}
"ஆம், இது தொடர்பில் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தைப் போல செயல்படவில்லை. எங்கள் அரசாங்கம் எதை விரும்புகிறதோ அதனையே செய்வோம்.
அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு நாடாளுமன்றுக்கு சென்ற பின்னர், நிறைய அலுவலக வேலைகள் செய்யப்பட இருக்கிறது. எனவே இது தொடர்பில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்", என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.