VIDEO : பொலிஸ் அதிகாரிகள் தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு தற்காப்பு உத்திகளை மேற்கொள்ளலாமா? - பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : பொலிஸ் அதிகாரிகள் தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு தற்காப்பு உத்திகளை மேற்கொள்ளலாமா? - பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன

பொலிஸ் அதிகாரிகள் சீருடையில் இருக்கும்போது தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரினால் உயிருக்கு ஆபத்தான விதத்தில் அல்லது தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் நபர் தன்னை பாதுகாத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரி கடமையில் இருக்கும்போது தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தினால் மட்டுமே பொதுமக்களால் தங்களை பாதுகாக்க தற்காப்பு நடவடிக்கைகளை பயன்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்களது உடல்நலம் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க தங்களைத் தற்காத்துக் கொள்ள சட்டம் இருப்பதாகவும், ஏனெனில் பொதுமக்கள் பெரும்பாலும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் நிராயுதபாணிகளாகவே உள்ளனர்.

நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானது, இது நியாயமான முறையில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் பன்னிப்பிட்டிய பிரதேச வீதியின் நடுவில் லொரி சாரதி ஒருவரை மீது பொலிஸ் அதிகாரி தாக்கிய சம்பவம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்தபோதே டிஐஜி அஜித் ரோஹன இதைக் குறிப்பிட்டுள்ளார்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.