நச்சுத் தன்மையுள்ள தேங்காய் எண்ணெய் பவுசர்களை மடக்கிப் பிடித்த பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நச்சுத் தன்மையுள்ள தேங்காய் எண்ணெய் பவுசர்களை மடக்கிப் பிடித்த பொலிஸார்!

நச்சு இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்ட தேங்காய் எண்ணெய் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் தன்கொட்டுவ பிரதேசத்தில் இரண்டு பவுசர் வண்டிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அவசரநிலை பதிலளிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல்களின்படி, 27500 லிட்டர் தேங்காய் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பவுசர்களின் ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் தேங்காய் எண்ணெய் ராகமை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தன்கொட்டுவ நகருக்கு அருகிலுள்ள எண்ணெய் ஆலையில் நிறுத்தப்பட்டிருந்தபோதே இவ்வாறு பொலிசாரால் கைது செய்யப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான எண்ணெய் இனை, ஆய்வாளரிடம் பரிந்துரைக்கப்பட்டு ஒரு அறிக்கை பெறப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பவுசர்களும் “எதிரிசிங்க எடிப்ல் ஒய்ல்” நிறுவனத்திற்கு சொந்தமானவை என்றும் குறித்த நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.