நாங்கள் எப்படி ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்து செயற்பட்டால் எங்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறமுடியாது! -SLPP நாலக கொடஹேவ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாங்கள் எப்படி ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்து செயற்பட்டால் எங்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறமுடியாது! -SLPP நாலக கொடஹேவ


அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு குறைவடைகின்றது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவ அரசாங்கத்திற்குள் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை காணவிட்டால் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் வெல்ல முடியாத நிலையேற்படலாம் என தெரிவித்துள்ளார்.


நாங்கள் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் எங்களுக்கு போதுமான மக்கள் ஆதரவு உள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


நாங்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம்,மக்கள் மத்தியில் பிரச்சினைகள் காணப்படுகின்றன அதிருப்தியும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.


நாங்கள் இதனை உணராவிட்டால் நாங்கள் மேலும்வீழ்ச்சியை நோக்கி தள்ளப்படுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்வரும் தேர்தல்களை இந்த அரசாங்கத்தினால் வெல்ல முடியுமா என்பது குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும், எங்கள் மத்தியில் ஐக்கியம் இல்லாவிட்டால் அடுத்த தேர்தல் சுலபமானதாகயிராது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.


நாங்கள் எப்படி ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்து  செயற்பட்டால் எங்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் தரப்பில் உள்ளவர்கள் கூட இதனை மறந்துவிட்டார்கள் என்பது கவலையளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.