ஊடகவியலாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக வழங்கப்பட்ட முறைப்பாடு போலியானது! -அஜித் ரோஹன

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊடகவியலாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக வழங்கப்பட்ட முறைப்பாடு போலியானது! -அஜித் ரோஹன


தன்னை கடத்திச் சென்று தாக்கி சிப் (CHIP) ஒன்றை கேட்டதாக ஊடகவியலாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாடு முற்றிலும் போலியானது என நீண்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


குறித்த நபர் வீட்டில் இருந்த மேசன் கரண்டியால் தன்னை தானே காயப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும் குறித்த ஊடகவியலாளர் விசாரணைகளின் பின்னர் அனுப்பி வைக்கப்பட்ட சமயம், நேரடியாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகனான சதுர சேனாரத்னவின் திம்பிரிகஸ்யாய பகுதியில் இருக்கும் காரியாலயத்துக்கு சென்று சுமார் 3 மணி நேரம் அங்கு இருந்துவிட்டு வெளியாகும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகிருப்பதாக அவர் தெரிவித்தார்.


அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பெயர் குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சதுர சேனாரத்ன ஆகியோரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.