குருநாகலில் கைதான நால்வர் தொடர்பில் பொலிஸார் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குருநாகலில் கைதான நால்வர் தொடர்பில் பொலிஸார் முன்வைக்கும் குற்றச்சாட்டு!


வாடகைக்கு வாகனங்களைப் பெற்று அவற்றுக்கான போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 


வாடகைக்கு பெறும் வாகனங்களுக்கான போலி ஆவணங்களை தயாரித்து அவற்றை விற்பனை செய்து வந்த குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருநாகல் பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் நீண்ட நாட்களாக இவ்வாறு மோசடி செய்துள்ளதாக விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.


மேலும் இவர்களால் கொள்ளையிடப்படும் வாகனங்களின் இலக்க தகடுகளை மாற்றி அவற்றையும் விற்பனை செய்தும் வந்துள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.


-செ.தேன்மொழி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.