வெளிநாட்டில் பணி புரிபவர்கள் நாடு திரும்பினால் இனி தனிமைப்படுத்தல் இலவசம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டில் பணி புரிபவர்கள் நாடு திரும்பினால் இனி தனிமைப்படுத்தல் இலவசம்?


கொரோனா தொற்றின் நெருக்கடியினால் மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளில் தொழில்புரிந்து நாடு திரும்புகின்ற இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைத்து இலவச சேவையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


அதற்கமைய, தனியார் துறையில் 10 சுற்றுலா விடுதி மற்றும் ஹோட்டல்கள் தெரிவுசெய்து தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்கும் திட்டம் கொரோனா ஒழிப்பு தேசிய செயலணி முன்வைத்திருக்கின்றது.


அதனூடாக ஒரே தடவையில் 571 பேருக்கு தனிமைப்படுத்தலில் சேரமுடியும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடுகின்றது.


இதில், ஹோட்டல் கட்டம், உணவு, நீர் உட்பட ஏனைய வசதிகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.