கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={1}
குறித்த பெண்ணுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் பின்னர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 484 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.