கொழும்பு மரதானையில் பாரிய தீ விபத்து - காரணமும் வெளியானது! - ஒருவர் பலி!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு மரதானையில் பாரிய தீ விபத்து - காரணமும் வெளியானது! - ஒருவர் பலி!!!

கொழும்பு - மரதானை சங்கராஜா மாவத்தையில் உள்ள கடை ஒன்றில் இன்று (24) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர்.

சமையல் எரிவாயு வெடித்தமையே தீ விபத்து ஏற்பட்டமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஹோட்டல் ஒன்றிலேயே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதில் பலபிட்டியில் வசிக்கும் 46 வயதுடைய குறித்த உணவகத்தின் சமையல்காரரே இறந்துள்ளதாக மரதானை பொலிஸார் தெரிவித்தனர்.

தீயைக் கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.