வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் தடுப்பூசி பெற்று வந்தால் தனிமைப்படுத்தல் அவசியமா? இராணுவத் தளபதி விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள் தடுப்பூசி பெற்று வந்தால் தனிமைப்படுத்தல் அவசியமா? இராணுவத் தளபதி விளக்கம்!

shavendra silva

வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் நிலையில், அவர்கள் தடுப்பூசி பெற்று வந்தாலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


தனிமைப்படுத்தல் பணியைத் திருத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் இதுவரை பரிசீலிக்கவில்லை.


தடுப்பூசி செயல்முறை இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், தற்போதுள்ள அமைப்பில் எந்த மாற்றங்களையும் அரசு கருத்தில் கொள்ளவில்லை என்று அவர் கூறினார்.


கடந்த வாரம் கொரோனா வைரஸ் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட பொதுமக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிக தன்னம்பிக்கை கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்தார்.


$ads={1}


முதல் சுற்று தடுப்பூசி பெற்ற பிறகு சிலர் முன்னெச்சரிக்கைகள் எடுக்காமல் இருக்க ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டார்.


முதல் டோஸ் எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸிலிருந்து யாருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


மேலும், உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் வசதியின் கீழ் ஒதுக்கப்பட்ட முதல் தொகுதி கொரோனா தடுப்பூசிகளையும் இலங்கை நாளை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


-எம்.எம் அஹமத்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.