கத்தோலிக்க தேவாலயத்தினுள் நுழைந்த முஸ்லீம் பெண் கைது! கண்டி - கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தோலிக்க தேவாலயத்தினுள் நுழைந்த முஸ்லீம் பெண் கைது! கண்டி - கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்!

katugastota police kandy

கட்டுகஸ்தோட்டை − சியம்பலாகஸ்தென்ன கத்தோலிக்க தேவாலயத்தினுள் கடந்த ஞாயிறு (07) அன்று இடம்பெற்ற கறுப்பு ஞாயிறு திருப்பலிக்கு, அல்குர்ஆனின் உள்ள விடயங்களை எழுதிய ஆவணங்களுடன் வருகைத் தந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இந்த பெண், தேவாலயத்திற்குள் வருகைத் தந்த வேளையிலிருந்து, அவரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.


இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அவரது பெயர் முஸ்லிம் பெயரை ஒத்ததாக இருந்துள்ளதாக அறிய முடிகின்றது.


இந்நிலையில், குறித்த பெண்ணை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தமது கைது செய்து தமது பொறுப்பின் கீழ் வைத்துள்ளனர்.


$ads={1}


53 வயதான அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரையே இவ்வாறு பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.