கல்கிசை தொடக்கம் காலி வீதியூடாக சுதந்திர சதுக்கம் வரையில் நாளை (25) பிற்பகல் 1.00 மணி முதல் போக்குவரத்து மட்டுப்பாடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அமரபுர பிரிவின் மஹாநாயக்க கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ள காரணத்தினால் இவ்வாறு போக்குவர்த்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை பிற்பகல் 1.00 மணிக்கு அவருடைய உடல் கல்கிசை தர்மபால விகாரையில் இருந்து வாகன பேரணி ஊடாக எடுத்துவரப்பட்டு பிற்பகல் 3.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மாற்று வீதிகளின் ஊடாக பயணிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.