குருநாகல் பகுதியில் ஹோட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குருநாகல் பகுதியில் ஹோட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு!


குருநாகல் பகுதியில் ஹோட்டல் ஊழியர்கள் இருவரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


குருநாகல் நகரத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு, நேற்று (20) மாலை வந்துள்ள நபரொருவர் அதன் ஊழியர்கள் மீது கண்ணாடி போத்தலினால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இதன்போது, ஹோட்டலுக்கு வந்துள்ள சந்தேக நபர் ஹோட்டல் ஊழியர்களிடம் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதுடன், பின்னர் கண்ணாடி போத்தலினால் இரு ஊழியர்களை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.


இதனைத் தொடர்ந்து, காயமடைந்த ஊழியர்களிருவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கலேவெல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.


-செ.தேன்மொழி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.